News July 5, 2024
கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி

அரசு கலைக் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்றுடன் அதற்கு அவகாசம் நிறைவடைவதால் மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். இவர்களை கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8ஆம் தேதி தொடங்குகிறது.
Similar News
News September 22, 2025
வைஷாலிக்கு தமிழக அரசு பணி

செஸ் கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கு, தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் பணிக்கான நியமன ஆணையை, CM ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், கால்பந்து வீராங்கனை சுமித்ரா, கூடைப்பந்து வீராங்கனை சத்யா, பாய்மரப்படகு வீரர் சித்ரேஷ் ஆகியோருக்கும் அரசு பதவிக்கான பணி நியமன ஆணைகளை CM வழங்கினார். இவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்கப்பட்டுள்ளது.
News September 22, 2025
உ.பி.,யில் சாதி பெயர்களை பயன்படுத்த தடை

அலகாபாத் HC-ன் உத்தரவை அடுத்து, FIR, அரஸ்ட் வாரண்ட் உள்பட போலீஸ் ஆவணங்களில் சாதிப் பெயரை பயன்படுத்த கூடாது என்று உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், போலீஸ் ஸ்டேஷன் நோட்டீஸ் பலகை, வாகனங்களிலும் சாதிய அடையாளங்களுடன் கூடிய வாசகங்களை உடனடியாக அழிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சாதி பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.
News September 22, 2025
அண்ணாமலை – டிடிவி சந்திப்பு: மீண்டும் கூட்டணியா?

NDA கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி-ஐ அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியுள்ளார். EPS-ஐ CM வேட்பாளராக ஏற்க மறுத்து கூட்டணியில் இருந்து டிடிவி விலகிய நிலையில், தமிழக நலனுக்காக அவரை சந்திப்பேன் என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு இருவரும் சந்தித்து 1:30 மணி நேரம் ஆலோசித்ததாகவும், அப்போது டிடிவி-ஐ மீண்டும் கூட்டணியில் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.