News April 27, 2025
இன்றே கடைசி…வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

ஐதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்றே சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டுமென ஹைதராபாத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டுமென அமித்ஷா உத்தரவிட்டார். இந்நிலையில், ஹைதராபாத்தில் சுற்றுலா-மருத்துவ விசாவில் தங்கியுள்ள 213 பேரின் விசாக்கள் ரத்தாகின. இரவுக்குள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர்.
Similar News
News April 28, 2025
விரைவில் உருவாகும் நாட்டின் முதல் AI..!

இந்தியாவின் முதல் உள்நாட்டு AI அடித்தள மாதிரியை உருவாக்க சர்வம் AI நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. 67 நிறுவனங்களிடம் இருந்து திட்ட அறிக்கை பெறப்பட்ட நிலையில், மேற்கூறிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வம் AI, கடந்த 2023-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான விவேக் ராகவன், ஆதார் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்.
News April 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 320 ▶குறள்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். ▶பொருள்: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.
News April 28, 2025
பண்டுக்கு போதாத காலம்.. ₹24 லட்சம் அபராதம்

MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் LSG படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியுடன் சேர்த்து LSG கேப்டன் பண்டுக்கு இன்னொரு அடியும் விழுந்துள்ளது. ஃபீல்டிங்கின் போது ஓவர் வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவருக்கு ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் நடந்த MI-க்கு எதிரான போட்டியிலும், அவருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.