News September 28, 2024
இன்றே கடைசி: உடனே விண்ணப்பிங்க

மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். NTPCஇல் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை NTPCஇன் www.careers.ntpc.co.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News January 1, 2026
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, ₹11 பைசா குறைந்து, ₹89.99 என வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டுச் சந்தையிலிருந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம், வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
News January 1, 2026
கற்பனை ஓவியமே மாளவிகா மோகனன்

மயிலின பெண்ணாக வலம் வரும் மாளவிகா மோகனன், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவர் வீசும் பார்வை, ஆடல் பாடல் மறந்து நெஞ்சை உறைய செய்கிறது. பூங்குளிராக, தூவும் மழையாக, காணும் கண்களுக்கு ஒளியாக, கற்பனை ஓவியமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த போட்டோஸ், உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 1, 2026
14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் என்கவுன்டர்

பிஹார், பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், முக்கிய நக்சலைட் தலைவர் தயானந்த் மலாக்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். 14-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரின் தலைக்கு ₹50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மலாக்கரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், INSAS ரகத் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


