News February 28, 2025
இன்றே கடைசி நாள்.. ரயில்வேயில் 1,036 Vacancy!

ரயில்வேயில் RRBயின் மூலமாக 1,036 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்கள், தலைமை சட்ட உதவியாளர், பொது வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி மூலம் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். வேலைக்கேற்ப ₹35,400 – ₹47,900 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News February 28, 2025
சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை கலெக்டர் மாற்றம்

3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, <<15609948>>சிறுமி தவறாலேயே<<>> அந்த சம்பவம் நடந்ததாகக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, அவரை மாற்றி, அப்பதவியில் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.
News February 28, 2025
விஸ்கி, பீர் மிக்சிங் செய்து குடித்தால் என்ன நடக்கும்?

சிலருக்கு விஸ்கி குடிக்கும் பழக்கமும், சிலருக்கு பீர் குடிக்கும் பழக்கமும் இருக்கும். இந்த இரண்டும் வெவ்வேறு ஆல்கஹால் என்பதால் இரண்டையும் ஒன்றாக கலந்து குடிப்பது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாந்தி, பேதி மற்றும் தூக்கமின்மையை அது உண்டாக்கும். அதேபோல், உடல்நலனில் மேலும் பல எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். ஆதலால் விஸ்கி, பீர் இரண்டையும் கலந்து குடிப்பதை தவிர்ப்பதே நல்லது.
News February 28, 2025
பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1இல் தொடங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, மாநிலம் முழுவதும் நாளை முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.