News December 4, 2024

பெண்களுக்கு எதிரான ‘சதி’க்கு முடிவு கட்டிய நாள் இன்று!

image

இந்தியாவில் ‘சதி’ உடன்கட்டை ஏறும் முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட தினம் இன்று. கணவனை இழந்த (விரும்பாத) பெண்ணை எரியும் சிதை தீயில் தள்ளி, ‘சதி மாதா’ என்ற புனித பட்டத்தை அளிக்கும் வழக்கம் வங்கத்தில் இருந்தது. கட்டாயப்படுத்தி தீயில் இறக்கும் இம்முறையை கேரி, ராஜாராம் மோகன் ராய் போன்றோர் எதிர்த்தனர். 1829இல் இக்கொடூரத்திற்கு எதிராக சட்டமியற்றி ஆளுநர் வில்லியம் பென்டிங்க் முடிவு கட்டினார்.

Similar News

News December 18, 2025

பட்டா தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

குறிப்பிட்ட நிலம், வீடு, வீட்டுமனை ஒருவருக்கு சொந்தமானது என்பதற்கான அரசு ஆவணமே பட்டா. அது தொலைந்து விட்டால், முதலில் தாசில்தாரிடம் புகார் அளிக்க வேண்டும். பின்னர் நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில் பட்டா எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து தாசில்தார் ஆபிசில் சமர்பிக்க வேண்டும். அது, VAO & வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பிறகு, ஒப்புதல் பெறப்பட்டு, நகல் பட்டா அளிக்கப்படும்.

News December 18, 2025

கலை நாயகன் காலமானார்.. கண்ணீருடன் குவியும் இரங்கல்

image

இந்தியாவின் புகழ்பெற்ற சிற்பியான ராம் சுதர் (100) வயது மூப்பு காரணமாக காலமானார். நாடாளுமன்றம் வளாகத்தில் உள்ள காந்தி சிலை, குஜராத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமை சிலை (வல்லபாய் படேல்), பெங்களூருவில் அமைந்துள்ள செழுமைக்கான சிலை (கெம்பேகவுடா) போன்றவை இவரின் கைவண்ணத்தில் உருவானவை. 2016-ல் பத்ம பூஷன் விருது பெற்ற அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 18, 2025

பாதியிலேயே அனுப்பப்படும் கர்ப்பிணிகள், குழந்தைகள்

image

விஜய்யின் பரப்புரை கூட்டத்திற்கு கர்ப்பிணிகள், சிறுவர்கள், குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதையெல்லாம் மீறி ஈரோடு பரப்புரை திடலுக்கு வந்த கர்ப்பிணிகள், குழந்தைகளை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார், தவெக நிர்வாகிகள் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். கரூரில் விஜய்யை பார்க்க சென்று உயிரிழந்தவர்களில் 9 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!