News February 23, 2025

கொடிய நோய்க்கு டாடா சொன்ன நாள் இன்று

image

இரு தலைமுறைகளுக்கு முன்புவரை வீட்டிற்கு ஒருவர் போலியோவால் பாதிக்கப்பட்டிருப்பார். அவருக்கு கைகளோ அல்லது கால்களோ செயல்படாமல் இருக்கும். போலியோ என்ற பெயர் கொண்ட இந்த நோய்க்கு முதல் தடுப்பூசி 1954ஆம் ஆண்டு இதே நாளில் போடப்பட்டது. அதன்பின், படிப்படியாக வளர்ச்சி பெற்று, இன்று போலியோ இல்லாத நாடாக இந்தியா முன்னேறியிருக்கிறது. நீங்களும் தவறாமல் உங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடுங்க.

Similar News

News February 24, 2025

இந்தியாவில் இத்தனை அதிசயங்களா?

image

உலகளவில் எந்தெந்த நாடுகளில் அதிகளவு UNESCO கலாசார தளங்கள் இருக்கிறதென்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், முதலிடத்தில் 60 தளங்களுடன் இத்தாலி உள்ளது. 43 தளங்களுடன் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. அவற்றில், தாஜ் மகால், அஜந்தா குகைகள் ஆகியவையும் அடங்கும். தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மகாபலிபுரம், நீலகிரி மலை ரயில் ஆகியவை இப்பட்டியலில் உள்ளன.

News February 24, 2025

நெடுஞ்சாலை டோல்கேட்டுகளில் டிஸ்கவுண்ட்.. அரசு திட்டம்

image

நெடுஞ்சாலை டோல்கேட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணத்தில் டிஸ்கவுண்ட் அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு டோல் கட்டணம் அதிகரிப்பது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மாதம், வருட, ஆயுள்கால கட்டணத் தள்ளுபடியுடன் கூடிய பாஸ்களை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News February 24, 2025

செல்போனில் இந்த லைட் எரிகிறதா? அப்படினா HACK

image

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதை வைத்து மோசடியும் அதிகமாக நடக்கின்றன. ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே உளவு பார்க்கும் வேலையும் நடக்கின்றன. ஆனால் இதை எளிதில் நாம் கண்டுபிடித்து விட முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத போதும் கூட, பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் போனில் லைட் எரிந்தால் அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உடனே போனை செக் பண்ணுங்க.

error: Content is protected !!