News October 25, 2024
ALERT: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல் இன்றும் வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்தத் தகவலை பகிருங்கள்.
Similar News
News November 24, 2025
TN-ல் பாஜக, RSS காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அது பிஹார், இது தமிழ்நாடு எனக் கூறியுள்ள அவர், பிஹாரில் பாஜக, JDU ஆளுங்கட்சியாக இருந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக, RSS எப்போதும் காலூன்ற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
MLA கொலை வழக்கு: பவாரியா கும்பலுக்கு ஆயுள் தண்டனை

2005-ல் அதிமுக MLA-வாக இருந்த சுதர்சனம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், குற்றவாளிகள் ராகேஷ், ஜெகதீஷ், அசோக் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2005-ல் MLA சுதர்சனத்தை கொன்றுவிட்டு அவரது மனைவி, மகனை கொடூரமாக தாக்கிவிட்டு 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
News November 24, 2025
புயல் அலர்ட்: 28 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

<<18376155>>புயல் <<>>உருவாகவுள்ளதால், பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், செங்கை, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம், விருதுநகரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது.


