News November 24, 2024
வரலாற்றில் இன்று (நவ.24)..!

*1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். *1859 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். *1914 – இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து முசோலினி விலக்கப்பட்டார். *1961 – பிரபல இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்தார். *1992 – யாழ்ப்பாணம், பலாலி வான்படைத் தளத்தின் கிழக்குப் பகுதியின் ராணுவ வேலி விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
Similar News
News December 4, 2025
திருச்சி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு நடப்பு ஆண்டுக்கு (2025-26) தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மூடி முத்திரை இடப்பட்ட விலை மதிப்பீடுகள் (டெண்டர்) வரும் 10-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. இவற்றை தெரிந்துகொள்வதால் நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும். அறிகுறிகள்: திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம். SHARE பண்ணுங்க.
News December 4, 2025
குழந்தைகளுக்கு எப்போது பசும்பால் கொடுக்கலாம்?

தாய்மார்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் பசும்பாலில் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதை எளிதில் செரிக்க முடியாது. அரிதான நேரங்களில் சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.


