News October 21, 2025
வரலாற்றில் இன்று

*1895 – ஜப்பானிய படைகளின் முற்றுகையால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
*1937 – நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்ததினம்.
*1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
*1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
*1987 -யாழ்ப்பாண ஹாஸ்பிடல் படுகொலையில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News October 21, 2025
இனி ₹13,000 மட்டுமே அனுப்ப முடியும்: மாலத்தீவு

மாலத்தீவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், இனி 150 டாலர்கள் (₹13,184) வரை மட்டுமே ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அந்நாட்டின் நாணய ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, 500 டாலர்கள் வரை (₹43,947) அனுப்ப முடியும். இந்த அறிவிப்பால், அங்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் பெரும்பாலான கேரள மாநிலத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
News October 21, 2025
கேதார கௌரி விரதம் இருப்பது எப்படி?

நல்ல கணவன் கிடைக்கவும், கணவரின் நலம் வேண்டியும் பெண்கள் கேதார கெளரி விரதம் மேற்கொள்வார்கள். 21 நாள்கள் மேற்கொள்ளப்படும் விரதம் தற்போது, ஒருநாள் விரதமாகிவிட்டது. காலையில் குளித்து, கலசத்தில் நூலால் 21 முடிச்சுகளை அமைத்து, சிவன் பார்வதியை வழிபடணும். 21 எண்ணிக்கையில் பாக்கு, வெற்றிலை, பூஜை பொருள்கள் படைத்து வழிபடலாம். விரதம் முடிந்து கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டலாம்.
News October 21, 2025
கரூர் துயரம்.. விஜய் எடுத்த புதிய முடிவு

கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், தங்களிடம் உள்ள ஆதாரங்களை அஜய் ரஸ்தோகியை நேரில் சந்தித்து வழங்க விஜய் தரப்பு முடிவு செய்துள்ளது. ஐகோர்ட் நியமித்திருந்த SIT-யிடம் இருந்து ஆவணங்களை பெற்றுள்ள CBI அதிகாரிகள் இந்த வாரத்தில் முழு வீச்சில் விசாரணையில் இறங்க உள்ளனர். அதேபோல், SC நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு அடுத்த வாரம் கரூர் வரவுள்ளதாக கூறப்படுகிறது.