News March 19, 2024
வரலாற்றில் இன்று!

➤ 1895 – லூமியர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர். ➤1944 – நாஜி ஜெர்மானியப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின. ➤ 1945 – ஜப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர். ➤ 2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.
Similar News
News October 13, 2025
ரஜினி, தனுஷ் வரிசையில் PR: நாகர்ஜுனா

சில தசாப்தங்களுக்கு முன்பு நெருப்பு போன்று ஒருவர் வந்து சினிமாவின் விதியையே மாற்றினார், அவர் தான் ரஜினிகாந்த். அதற்கு பிறகு ஒல்லியான ஒருவர் இளைஞர்களின் ஆதரவை பெற்றார், அவர் தனுஷ். அந்த வகையில், தற்போது ஒருவர் வந்துள்ளார், அவர் தான் பிரதீப் ரங்கநாதன் என்று மாஸ் இன்ட்ரோ கொடுத்து புகழ்ந்துள்ளார் நாகர்ஜுனா. உங்களுக்கு பிரதீப்பிடம் பிடித்தது என்ன? கமெண்ட் பண்ணுங்க.
News October 13, 2025
சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று முதல் 19-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இன்று தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, தி.மலை உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும், நாளை நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
News October 13, 2025
TN முழுவதும் மருந்து நிறுவனங்களில் ஆய்வு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு செய்ய TN அரசு உத்தரவிட்டுள்ளது. கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து, பல்வேறு ஆய்வுகளுக்கு பின் ஸ்ரீசன் பார்மாவின் உரிமத்தை அரசு ரத்து செய்தது. அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விதிகளை மீறிய இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.