News April 16, 2025

வரலாற்றில் இன்றைய தினம்

image

> அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது (1862)
> ஜாலியன் வாலா பாக் படுகொலையை கண்டித்து காந்தி ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார் (1919)
> கியூபாவை ஒரு பொதுவுடைமை நாடு என்று பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார் (1961)
> முதலாவது உலக தமிழ் மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது (1966)

Similar News

News April 16, 2025

ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டி.. மைதானம் அறிவிப்பு

image

2028 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டிகள், தெற்கு கலிஃபோர்னியாவின் பொமோனாவில் உள்ள மைதானத்தில் நடக்கும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இந்த மைதானம், 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 அணிகள் 2028 ஒலிம்பிக்ஸில் மோத உள்ளன.

News April 16, 2025

‘தெகிடி’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்

image

தனியார் விமான பைலட் சாய் ரோஷன் ஷியாம் என்பவருடன் நடிகை ஜனனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘Now and Forever’ என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அந்த ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘அவன் இவன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜனனிக்கு, ‘தெகிடி’ படம் கெரியரின் முக்கிய படமாக அமைந்தது.

News April 16, 2025

தர்பூசணியில் எந்த ரசாயனமும் இல்லை – தமிழக அரசு

image

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் உணவு பாதுகாப்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க அதிகாரிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!