News March 17, 2024
வரலாற்றில் இன்று

➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤ 1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News September 19, 2025
தனியார் பள்ளி டீச்சர்களுக்கும் நல்லாசிரியர் விருது: அமைச்சர்

அடுத்தாண்டு முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பள்ளி விழாவில் பேசிய அவர், TN பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட ஆசிரியர்கள்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வந்தது.
News September 19, 2025
PM மோடியின் அரசியல் வழிகாட்டி காலமானார்!

RSS மூத்த நிர்வாகி மதுபாய் குல்கர்னி(88) காலமானார். 1942-ல் RSS-ல் இணைந்த இவர், மாவட்ட- மாநில பதவிகளில் அங்கம் வகித்துள்ளார். 1985-ல் இவர் மாநில நிர்வாகியாக இருந்த போது, மாவட்ட நிர்வாகியாக RSS பணிபுரிந்து வந்த தற்போதைய PM மோடியை BJP-ல் இணையும் படி இவர்தான் அறிவுறுத்தினார் என கூறப்படுகிறது. கடந்த 2015 வரை RSS-ல் பணியாற்றி, உடல்நல குறைவால் அதன்பிறகு பொதுவாழ்வில் சற்று விலகியுள்ளார்.
News September 19, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாக்கீரை!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.
*புதினாக் கீரை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
*கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாக கட்டி பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும். SHARE.