News March 17, 2024
வரலாற்றில் இன்று

➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤ 1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News April 7, 2025
அன்றே கணித்த மார்க்கெட் வித்தகர்

உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால், பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் முதல் கடைக்கோடி முதலீட்டாளர் வரை முதலீட்டை இழந்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் பங்குச்சந்தை புலி, வாரன் பஃபெட் மட்டும் லாபம் ஈட்டியிருக்கிறார். எப்போதும், சந்தை வீழ்ச்சியடையப் போவதை முன்கூட்டியே கண்டறிந்து, முதலீடுகளை பணமாக மாற்றி வைக்கும் அவர், இந்த முறையும் அதேபோல செய்து தப்பித்திருக்கிறார்.
News April 7, 2025
அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி திடீர் விலகல்

மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் திடீரென விலகியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில், இந்த வழக்குகளின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தான் இடம்பெறாத வேறு அமர்வு முன் பட்டியலிட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
News April 7, 2025
மாநிலங்களவை எம்.பி.யாகும் அண்ணாமலை?

தமிழக பாஜக புதியத் தலைவர் யார் என்பது குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. புதிய தலைவர் பதவிக்கு எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் தற்போதைய தலைவர் அண்ணாமலையின் முக்கியத்துவம் குறையக் கூடாது என கருதும் பாஜக மேலிடம், அவரை மாநிலங்களவை எம்.பி., ஆக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.