News March 17, 2024
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க, பொதுமக்களுக்காக 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை 14.03.2024 முதல் இயங்கி வருகிறது. பொதுமக்கள் 044-27660641, 044-27660642, 044-27660643, 044-27660644 மற்றும் 1800 425 8515 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும் தங்கள் புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
திருவள்ளூர் சாலையில் கஞ்சா செடி!

திருவள்ளூர்: ஒண்டிக்குப்பம் பகுதியில் சாலை ஓரமாக வளர்ந்திருந்த கஞ்சா செடியை காவல்துறையினர் இன்று (ஜன.19) கண்டெடுத்து பிடுங்கிச் சென்றனர். சமீபத்தில் இரட்டைக்கொலை நடைபெற்ற இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவிலேயே இந்த கஞ்சா செடி கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 19, 2026
திருவள்ளூர்: முன்னாள் படை வீரர்கள் கவனத்திற்கு!

திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (பிப்.04) அன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெற வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News January 19, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர்: 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் (பிப்.2) முதல் (பிப்.28) வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444139373 மற்றும் 8838522794 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.


