News August 25, 2025

அறிவு வளர சதுர்த்தியிலிருந்து இத தினமும் செய்யுங்க..

image

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் மிக முக்கியமானது. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய அறிவியல் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதை செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராவதுடன், மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி, மற்றும் உடலின் தசைகள் வலுப்பெறுகிறதாம். இத்துடன், செரிமானம் சீராவதுடன், தூக்கமின்மையும் சரியாகிறது. தினமும் 15 – 50 தோப்பு கரணம் போடுவது பெரும் பலனை பெற்றுத்தரும்

Similar News

News August 25, 2025

Beauty Tips: Lip Balm வேணாம்.. உதடு பளபளக்க Tips

image

முகம், சிகை, உடைக்கு தரும் முக்கியத்துவத்தை நாம் உதடுகளுக்கு தருவதேயில்லை. உதடுகளை பராமரிக்க Lip balm மட்டும் போதாது. அதற்கு பல எளிய வழிகள் இருக்கிறது. ▶தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ▶உதட்டை நாவால் தடவ வேண்டாம் ▶நீண்ட நேரம் லிப்ஸ்டிக் போட்டப்படியே இருக்காதீர்கள் ▶பற்களின் சுகாதாரமும் முக்கியம் ▶புகைப்பழக்கத்தை விடுங்கள் ▶வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். SHARE IT.

News August 25, 2025

அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நற்செய்தி

image

பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற MHC மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு SC இடைக்காலத் தடை விதித்துள்ளது. MHC உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு 4 வாரத்திற்குள் TN அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 25, 2025

திருப்பதியில் நடிகர் ரவி மோகன்… காரணம் தெரியுமா ?

image

இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் திருப்பதி எழுமலையானை தரிசித்துள்ளார். சென்னையில் நாளை ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கி அவர் தயாரிக்கும் புதிய படங்களின் அறிவிப்பை வெளியிடவுள்ளார். தொடங்கும் தொழில் தழைத்தோங்க ரவி மோகன் ஏழுமலையானை தரிசித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் சபரிமலைக்கு மாலை போட்டு ஐயப்பனை தரிசித்திருந்தார்.

error: Content is protected !!