News August 12, 2025
இறை வழிபாட்டின் முழு பலனை பெற..

வீட்டில் தினமும் இஷ்ட தெய்வத்தை வணங்க முடியவில்லை என்றால், அதற்கு கர்ம வினைகளே காரணமாக இருக்கும். இந்த கர்ம வினையை மாற்றி, வீட்டில் பூஜை செய்ய, இந்த 3 விஷயங்களை செய்யுங்கள். வீட்டில் பூஜை செய்யும் போது, இறைவனின் படத்திற்கு கைகளால் பூக்களைத் தூவி, மனதை ஒருநிலைப்படுத்தி, வாய் முழுக்க சத்தமாக கடவுள் மந்திரங்களை சொல்லி பூஜியுங்கள். இது பூஜையின் முழு பலன்களை அடைய செய்யும் என்பது ஐதீகம்.
Similar News
News August 12, 2025
நேரில் பார்க்காத ஸ்டாலின், EPS! இரங்கல் தெரிவிக்காத விஜய்!

2026-ல் CM வேட்பாளர்களாக களமிறங்கும் ஸ்டாலின், EPS, விஜய் ஆகியோர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காதது சர்ச்சையாக வெடித்துள்ளது. தூத்துக்குடிக்கு சென்ற ஸ்டாலின், EPS இருவரும் கவின் குடும்பத்தை நேரில் சந்திக்கவில்லை. அதேபோல், விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் விஜய், EPS பெயரை குறிப்பிட்டு சாடிய திருமா, ஸ்டாலின் பெயரை தவிர்த்தது பேசுபொருளாகியுள்ளது.
News August 12, 2025
கஞ்சாவை மத்திய அரசே தடுக்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி

தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை, சாராயமும் காய்ச்சுவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அவற்றை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசை சாடினால் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை சோதனை வந்துவிடுமோ என்ற பயத்தில் தமிழக அரசு மீது ராமதாஸ் குறைகூறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
News August 12, 2025
உங்களின் தலையெழுத்தை மாற்றும் ஒற்றை சொல்..

தொடர் தோல்விகளால் தவித்து போயிருப்பவர் நீங்கள் என்றால், இந்த ஒரு வார்த்தை உங்களின் தலையெழுத்தையே மாற்றும். எந்த ஒரு சூழலிலும் ‘என்னால் முடியும்’ என்ற எண்ணத்தை மட்டும் மனதில் ஆழமாக நிறுத்துங்கள். அதே போல, சுத்தமான கரும்பலகையில்தான் எதையும் எழுதமுடியும். ஆகவே மனதிலுள்ள குப்பைகளை நீக்குங்கள், அதாவது எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். SHARE IT.