News April 21, 2024
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க…

நீரிழிவு நோயாளிகள் உணவில் வாழைப்பூ, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். நாவல் கொட்டை, மருதம் பட்டை, சிறுகுறிஞ்சான், வேப்பம் பட்டை, கடலழிஞ்சில் ஆகிய ஐந்தையும் சம அளவு பொடி செய்து காலை, இரவு ஆகிய நேரங்களில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதே போல, ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கசாயமாக பருகலாம்.
Similar News
News February 13, 2026
ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை கொலை செய்த பெண்!

ஜோதிடரின் பேச்சை நம்பிய பெண் ஒருவர் தாயை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. சுசித்ரா(33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். ஜோதிடர் ஒருவர் தாயாரே சூனியம் வைத்து தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை நம்பிய சுசித்ரா, தாயார் தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவந்துவிட்டது.
News February 13, 2026
கூட்டணி கட்சிக்கு எதிராகவே கருத்து சொன்ன வைகோ

கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருவதாக வைகோ கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு, அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை என்ற அவர், ஆனால் தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது காங்கிரஸின் இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது என்றார். மேலும், மதிமுக இதுபோல எவ்வித நிபந்தனையும் விதித்ததில்லை என தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
வெறும் நாணயங்கள் அல்ல.. நினைவுகள்!

மேலே உள்ள போட்டோவில் இருப்பவை, ₹2 காசு முதல் ₹25 காசு வரையிலான நாணயங்கள் ஆகும். இவையெல்லாம், இப்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், 1990ல் பிறந்தவர்களின் மறக்க முடியாத நினைவுகள். கமர்க்கட்டு, விரலில் மாட்டிக் கொள்ளும் சுத்து மிட்டாய், தேன் மிட்டாய், பட்டாணி என அப்போதெல்லாம் சுவைத்தவை நினைவிற்கு வந்து போகிறது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது இந்த நாணயங்கள் இருந்ததா? உங்கள் நினைவுகளை சொல்லுங்க.


