News September 30, 2025
TNPSC தேர்வர்களுக்கு ஹேப்பி: காலியிடங்கள் அதிகரிக்கும்

TNPSC கேள்வித்தாள்களை பிழையின்றி தயாரிக்க நிபுணர் குழுவை அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தவறான கேள்விகளை வடிவமைக்கும் நிபுணர்களை பணியில் இருந்து மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் பிழைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறதாகவும் குறிப்பிட்டார். மேலும் குரூப் 2, 2-A பதவிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News September 30, 2025
உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது: ஹேமமாலினி MP

பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை என கரூரில் ஆய்வு செய்த MP ஹேமமாலினி சாடியுள்ளார். பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது எனவும் கூறியுள்ளார். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்துபோல் இல்லை என தெரிவித்த அவர், உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: விஜய்

தனது பரப்புரையின் போது மக்களுக்கு பாதுகாப்பான இடங்களையே தேர்வு செய்வதில் கவனமுடன் இருந்ததாக விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, மக்கள் பாதுகாப்பை மட்டுமே மனதில் கொண்டு பரப்புரைக்கு போலீஸிடம் அனுமதியும், பாதுகாப்பும் கேட்டோம் என்றார். எனினும், கரூரில் நடக்கக் கூடாத துயரம் நடந்துவிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
News September 30, 2025
ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: விஜய்

கரூர் துயரச் சம்பவத்தின் போது, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். சற்றுமுன் வெளியிட்ட <<17876190>>வீடியோவில்<<>> பேசிய அவர், எங்களின் வலிகளை, நிலைமைகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டார். இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் விஜய்மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.