News September 3, 2025
TNPSC குரூப் 4: ஜனாதிபதிக்கு தேர்வர்கள் கடிதம்

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, முனைவர் பட்ட அளவிலான கேள்விகளை உள்ளடக்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சீலிடப்படாத கேள்வித்தாள்கள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுதேர்வு நடத்த வேண்டும், குளறுபடிகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி, PM, கவர்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.
Similar News
News September 4, 2025
போன் கேலரியில் ஆதார் Save பண்றீங்களா.. உஷார்!

ஆதார் & பான் கார்டு போட்டோஸை Phone gallery, சேமித்து வைக்க வேண்டாம் என புகழ்பெற்ற சைபர் பாதுகாப்பு நிபுணர் ரக்ஷித் டாண்டன் தெரிவித்துள்ளார். Hack Proof உச்சி மாநாட்டில் பேசும் போது, இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை Digilocker-ல் சேமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பல App-களும் Install பண்ணும் போது, Gallery access-ஐ பெறுவதால், அது பாதுகாப்பானது இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார். SHARE IT.
News September 4, 2025
ஜிஎஸ்டி வரி குறைப்பால் என்ன நடக்கும் தெரியுமா?

GST வரி குறைப்பால் அரசுக்கு ₹93 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், ஆடம்பர பொருட்களை 40%-க்குள் கொண்டு வருவதால் ₹45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதன் விளைவாக, ₹48 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும், வரி குறைப்பால் மிச்சமாகும் பணத்தை மக்கள் செலவிட விரும்புவார்கள். இது அப்பணத்தை மீண்டும் பொருளாதாரத்திற்கு கொண்டுவரும். வரிகள் குறைக்கப்பட்டாலும், அரசுக்கு அதிக இழப்பு ஏற்படாது.
News September 4, 2025
சற்றுமுன்: கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தவெக?

NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி நேற்று அறிவித்தார். இதனையடுத்து, EPS மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், OPS உடன் இணைந்து, விஜய்யின் தவெகவுடன் டிடிவி கூட்டணி வைக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில், அவரின் கூட்டணி விலகல் செய்தியை தவெகவினர் பகிர்ந்து வருகின்றனர். இது டிடிவியை தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் சமிக்ஞை போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.