News September 14, 2024
TNPSC குரூப்-2 தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது. 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, 2ஏ தேர்வை TNPSC நடத்துகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது. 7.93 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
Manchester-ஐ Monster-ஆக மாற்றிய திமுக: நயினார்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை <<18222861>>பெண் கடத்தல்<<>> சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் Manchester-ஐ, Monster-கள் உலா வரும் பகுதியாக மாற்றியதே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார். TN காவல்துறை, திமுகவின் ஏவல்துறையாக செயல்படக் கூடாது எனவும், இளம்பெண்ணை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News November 7, 2025
முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் மஸ்க்!

எலான் மஸ்க்குக்கு 1 ட்ரில்லியன் டாலரை (₹88 லட்சம் கோடி) ஊதியமாக வழங்க டெஸ்லாவின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதை பணமாக அல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் டெஸ்லா பங்குகளாக அவர் பெறுவார். இதன் மூலம், அவர் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக வாய்ப்புள்ளது. டெஸ்லா சந்தை மதிப்பில் $8.5 டிரில்லியனை அடைய வேண்டும் என இவருக்கு டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
News November 7, 2025
இன்று புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!

மார்பக, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. மக்களுக்கு இந்த பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் நவ. 7-ம் தேதி இந்திய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் இந்த நாளில், விழிப்புணர்வு மட்டுமின்றி, புற்றுநோயை எதிர்கொள்ளும் சமூக மனப்பாங்கை உருவாக்கும் ஒரு நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது.


