News September 14, 2024
TNPSC குரூப்-2 தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தொடங்கியுள்ளது. 2,327 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, 2ஏ தேர்வை TNPSC நடத்துகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது. 7.93 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
ஸ்டார்பக்ஸ் தலைமை பொறுப்பில் தமிழர்

சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா என உலக அளவில் உள்ள பெருநிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் அசத்தி வருகின்றனர். அந்தவரிசையில் இணைந்துள்ளார் இந்திய வம்சாவளியான ஆனந்த் வரதராஜன். ஸ்டார்பக்ஸ், தனது புதிய தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஆனந்தை நியமித்துள்ளது. சென்னை IIT பட்டதாரியான இவர், அமேசான் நிறுவனத்தில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். வரும் ஜன.19-ம் தேதி அவர் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார்.
News December 23, 2025
பலமுறை கமிஷன் வாங்கி இருக்கேன்: மத்திய அமைச்சர்

பிஹாரில் MP, MLA-க்கள் அனைவரும் கமிஷன் வாங்குவதாக மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமிஷன் வாங்குவது ரகசியமில்லை எனக்கூறிய அவர், தானே பலமுறை கமிஷன் வாங்கி, அந்த பணத்தை கட்சி நிதிக்கும் அளித்துள்ளதாக தெரிவித்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் குறைந்தபட்சம் 5% ஆவது கமிஷன் பெற அட்வைஸ் செய்தது, அவர் இடம்பெற்றுள்ள பாஜக கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 23, 2025
இறந்தவர் உயிருடன் வந்தார்.. அதிர்ச்சி தகவல்

SIR திருத்ததிற்கு பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவரின் பெயர் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 2021-ல் உயிரிழந்த பாடலாசிரியரும், அதிமுக Ex. அவை தலைவருமான புலமைப்பித்தனுக்கு மயிலாப்பூரில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், SIR பணிகளை அவசரமாக நடத்தினால் குளறுபடிகள் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் ஓட்டு பத்திரமா இருக்கா?


