News September 26, 2025
TNPSC குரூப்-2 தேர்வு: ஒரு இடத்திற்கு 858 போட்டி

நாளை மறுதினம் நடைபெறவுள்ள குரூப்-2, 2A தேர்வுக்கான புதிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. 1,905 மையங்களில் 5,53,634 பேர் தேர்வு எழுத உள்ளனர். காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும், ஹால்டிக்கெட் தவிர எவ்விதமான மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. 645 பணியிடங்களுக்கு 5,53,634 பேர் தேர்வு எழுத உள்ளதால் ஒரு இடத்திற்கு 858 பேர் போட்டிப்போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 26, 2025
பெண்களுக்கு ₹10,000 நிதி.. PM மோடி துவக்கி வைத்தார்

பீஹாரில் சுய தொழில் செய்வதற்காக 75 லட்சம் பெண்களுக்கு ₹10,000 வழங்கும் திட்டத்தை PM மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ₹7,500 கோடி, பெண்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு முதல் தவணையாக ₹10,000, 2-வது தவணையாக ₹2 லட்சம் வழங்கப்படவுள்ளது. பிஹாரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகத்திற்கும் வருமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News September 26, 2025
இங்கே செல்போன்கள் வேலை செய்யாதாம்

பூமியின் சில இடங்களில் செல்போன்கள் செயல்படுவதில்லை. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தால் இந்த இடங்கள் இயற்பியல், காந்தவியல் பற்றிய நமது புரிதலுக்கு சவாலாக உள்ளன. அவை என்னென்ன இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுபோன்று உங்களுக்கு தெரிந்த விசித்திரமான இடத்தின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 26, 2025
தலைமுடி அடர்த்தியா வளர சீக்ரெட் எண்ணெய்

முடி அதிகமாக உதிர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகுறீங்களா? இந்த எண்ணெயை ட்ரை பண்ணி பாருங்க. ➤ஆலிவ் ஆயிலை சூடாக்கி, ரோஸ்மேரி, கருஞ்சீரகம், வெந்தயம், பூண்டு மற்றும் கிராம்பு ஆகியவற்றைச் சேர்க்கவும் ➤5 – 7 நிமிடங்கள் வரை அடுப்பில் வையுங்கள் ➤எண்ணெயை வடிகட்டி ஜாடியில் வைத்துக்கொள்ளுங்கள் ➤வாரத்துக்கு 2 – 3 முறை Scalp-ல் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து தலைக்கு குளித்து வர முடி அடர்த்தியாக வளரும். SHARE.