News December 31, 2024
TNPSC தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

கரூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News December 8, 2025
கரூர்: அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

கரூர்: இன்று வடகிழக்கு பருவமழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அமராவதி ஆற்றில் 2000 கன அடி முதல் 3000 கன அடி வரை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். எனவே கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
News December 8, 2025
பாலவிடுதியில் வசமாக மாட்டிக் கொண்ட பெண்!

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒருவர் விற்பனை செய்வதாக, பாலவிடுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீசார் நேற்று இரவு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது மாரியம்மாள் என்பவர் புகையிலை பொருள்களை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
News December 8, 2025
கரூர் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

கரூர் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


