News August 16, 2025
ED அதிகாரிகள் மீது வழக்கு பதிந்த TN போலீஸ்!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே ED அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், சேப்பாக்கம் MLA-க்கள் விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் அறையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, MLA-க்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் ED அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 8, 2026
₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 8, 2026
கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT
News March 7, 2026
விஜய்க்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? திருமா பதில்

வரும் தேர்தலில் விஜய் எதிர்க்கட்சியாக அமர வாய்ப்புள்ளதாக <<19316817>>ஜோதிமணி <<>>கூறியிருந்தார். இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, அது ஜோதிமணியின் கருத்து; மக்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும் என பதில் அளித்தார். மேலும், விஜய்க்கு ஊடக வெளிச்சம் அதிகமாக இருப்பதாகவும், TN அரசியலையே அவர் தலைகீழாக மாற்றப்போகிறார் என்ற அளவுக்கு திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாகவும் திருமா கூறியுள்ளார்.


