News September 28, 2025

TN அரசு, போலீஸ் கடமை தவறிவிட்டது: EPS

image

விஜய்யின் கரூர் பரப்புரையில் TN அரசும், போலீசும் கடமை தவறிவிட்டதாக EPS சாடியுள்ளார். விஜய் பேசி கொண்டிருந்த போது தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது சந்தேகத்தை கிளப்புகிறது என்றும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று EPS பேசினார்.

Similar News

News September 28, 2025

தவெகவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி

image

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி எம்.தண்டபாணி ஒப்புதல் வழங்கியுள்ளார். தவெக சார்பாக வழக்கறிஞர் அறிவழகன், நிர்மல் குமார் முறையிட்ட நிலையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் நாளை (செப்.29) பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணையின் போது முக்கிய சிசிடிவி ஆதாரங்கள் சமர்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

News September 28, 2025

கரூரில் சீமானை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

image

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க கரூர் அரசு ஹாஸ்பிடலுக்கு சீமான் சென்றார். இதனையடுத்து, பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை காண முற்பட்ட சீமானை, பலியானோரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். தங்களை பிணவறையினுள் செல்ல அனுமதிக்கவில்லை எனவும், உடல்களை விரைவில் ஒப்படைக்க மறுக்கிறார்கள் என்றும் சீமானிடம் கூறி முறையிட்டுள்ளனர்.

News September 28, 2025

கரூர் சம்பவத்தால் தாங்க முடியாத துயரம்: கார்த்தி

image

கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம் என்று கார்த்தி கூறியுள்ளார்.

error: Content is protected !!