News April 24, 2025
பாகிஸ்தானியர்கள் வெளியேற TN அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தொழில், வர்த்தகம், மருத்துவ ரீதியாக வந்த பாகிஸ்தானியர்களின் விபரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடந்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 24, 2025
பிரதமர் பிஹார் சென்றது ஏன்? திருமா கேள்வி

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை பிஹார் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு PM மோடி பயன்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்திற்கு செல்லாமல் பிஹார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றது அதிர்ச்சியளிப்பதாகவும், அது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அமித் ஷா கூறிய பிறகுதான் இக்கொடூர நிகழ்வு நடந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
News April 24, 2025
SAY NO TO PSL… அதிரடி நடவடிக்கை

IPL போல பாகிஸ்தானில் PSL நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் PSL கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்தியாவில் ஃபேன்கோட் இணையதளத்தின் வழியாக PSL-ஐ இந்தியாவில் பார்க்கும் வசதி உள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் PSL ஒளிபரப்பப்படாது. செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 24, 2025
குடும்பமே உயிர்தப்பிய சம்பவம்; கல்மா என்றால் என்ன?

‘மற்றவர்களுடன் நானும் கல்மா சொன்னதால் என்னுடைய குடும்பம் உயிர் பிழைத்தது’ என பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய அசாம் பல்கலை பேராசிரியர் தேபாசிஷ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். கல்மா என்பது அல்லாஹ் ஒருவரே கடவுள் என்றும், முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் முழுமையான நம்பிக்கை கொள்வதாகும். இந்த கல்மாவில் மொத்தம் 6 வகைகள் உள்ளன.