News February 24, 2026
TN ELECTION: தேர்தல் அதிகாரி அறிவித்தார்

தமிழக தேர்தல் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, தலைநகர் சென்னையில் தேர்தல் பணிகளை வேகப்படுத்த 8 கண்காணிப்பு அதிகாரிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் நியமித்துள்ளார். மொத்தமுள்ள 16 தொகுதிகளை கணக்கில் கொண்டு, 2 தொகுதிகளுக்கு 1 அதிகாரி வீதம் 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
Similar News
News March 21, 2026
கூட்டணி: வேதனையுடன் திருமா முடிவை அறிவித்தார்

தவாக, CPM-ஐ தொடர்ந்து, திருமாவும் திமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசிய திருமா, திமுக கூட்டணியில் சொற்ப தொகுதிகள் தான் கிடைப்பதாக வெளிப்படையாக வேதனையை தெரிவித்துள்ளார். கட்சியினர் சீட் கேட்டு தன்னை நெருக்கடிக்கு உள்ளாக்குகிற நிலை தொடர்வதாகவும், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டு பெறுவோம் எனவும் உறுதிப்பட அறிவித்துள்ளார்.
News March 21, 2026
துரைமுருகனுக்கு இனி அமைச்சர் பதவி கிடையாதா?

வயோதிகம் & உடல்நிலையை கருத்தில்கொண்டு அமைச்சர் துரைமுருகனை தேர்தலிலிருந்து விலக்க திமுக முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதனிடையே, உதயநிதியை துரைமுருகன் சந்தித்த நிலையில், இந்த முறை மட்டும் கடைசியாக அவருக்கு சீட் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால் துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்ற முடிவிலும் கட்சித் தலைமை உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 21, 2026
ரம்ஜான் பிரியாணி சாப்ட்டீங்களா?

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம், இஸ்லாமிய தோழர்கள் தங்களது வீடுகளில் கறி பிரியாணி சமைத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அனைத்து மதத்தினரும் இணைந்து வாழும் நமது நாட்டில் ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி எல்லோருக்குமே ஃபேவரைட்தான். உங்கள் இஸ்லாமிய நண்பர் உங்களுக்கு பிரியாணி கொடுத்தாரா? உரிமையா கேட்டு வாங்குங்க.


