News August 11, 2024
செபி தலைவர் பதவி விலக TMC வலியுறுத்தல்

Hindenburg நிறுவன குற்றச்சாட்டைத் தொடர்ந்து, செபி தலைவர் மதாபி பதவி விலக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடந்து முடியும் வரை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டுமென கூறியுள்ளது. மதாபியும், கணவரும் நாட்டைவிட்டு தப்பாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவும் TMC கோரியுள்ளது.
Similar News
News November 27, 2025
நடிகர் ஜெயராம் கைது செய்யப்படுகிறாரா?

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் <<18367317>>ஜெயராம்<<>> முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோயில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜெயராமை கைது செய்ய, SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 27, 2025
7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

தென்மேற்கு வங்க கடலில் <<18399959>>காற்றழுத்த தாழ்வு மண்டலம்<<>> உருவான நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற IMD அறிவுறுத்தியுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.
News November 27, 2025
செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணி விலகலா?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், EX மினிஸ்டர் தங்கமணி, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளாராம். இதனால், செங்கோட்டையனை போலவே, தங்கமணியும் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும்.


