News March 16, 2024

திருவாரூர்: வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தரைமட்டம்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதி பாலகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சுமார் 40 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி கட்டிடங்களை அகற்றும் பணியினை மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த.சோழராஜன் இன்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகராட்சி பொறியாளர், கட்டிட மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News

News August 9, 2025

திருவாரூர்: பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

திருவாரூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 9, 2025

திருவாரூர்: இழந்ததை மீட்டுத் தரும் எண்கண் முருகன்!

image

திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் முருகனின் சிலையை வடித்த சிற்பியின் இரு கண்களை, முத்தரச சோழன் தானமாக பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு முருகன் கண்களை வழங்கியதால் எண்கண் முருகன் என பெயர் வந்துள்ளது. இதனால் இங்கு பிராத்தித்தால் இழந்தவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதை Share பண்ணுங்க…

News August 9, 2025

அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து

image

குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து அகர ஓகை அருகே சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த பெரும் விபத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

error: Content is protected !!