News March 17, 2024
திருப்பூர்: நாய்கள் கடித்து மான்கள் பலி

திருப்பூர் புதுப்பாளையம் ஊராட்சி மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பிறந்து ஆறு மாதமே ஆன புள்ளிமான் ஒன்று பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது. அதேபோன்று அதே பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. விசாரணையில் தெரு நாய்கள் கடித்ததில் இரண்டு புள்ளி மான்களும் நேற்று உயிர் இழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News January 8, 2026
திருப்பூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலாமணி (55). இவர் வீட்டில் இருந்தபோது ஹீட்டர் மூலமாக வெந்நீரை சுட வைத்ததாக தெரிகிறது. அப்போது சுவிட்சை ஆப் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலாமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 8, 2026
திருப்பூர் அருகே போலீஸ் குவிப்பு

பெருமாநல்லூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை நீதிமன்ற உத்தரவு படி நேற்று அதிகாரிகள் அற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News January 8, 2026
திருப்பூர்: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் <


