News March 18, 2024
திருப்பூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் மறுபடியும் அந்த தொகுதியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News November 15, 2025
திருப்பூர் அருகே தொழிலாளி தற்கொலை!

பொங்கலூர் அருகே உள்ள குருநாதன்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆம் தேதி விஷ மாத்திரை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்று பாண்டி நேற்று உயரிழந்தார். இது குறித்து அவிநாசி பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 15, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூர் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காங்கேயம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம், அரசம்பாளையம், சாவடிபாளையம், தம்மரெட்டிபாளையம், ஒட்டபாளையம், கீரனூர், பரஞ்சேர்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 15, 2025
திருப்பூர் அருகே 11 பேர் அதிரடி கைது!

திருப்பூர், குன்னத்தூர் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் குன்னத்தூர் காவல் ஆய்வாளர் சுசீலா தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில், பணம் வைத்துச் சூதாடிய 11 நபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


