News March 16, 2024
திருப்பத்தூர்: வாணியம்பாடி எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று வாணியம்பாடி பகுதியில் உள்ள வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்துறையினர் சீல் வைத்தனர்.
Similar News
News November 25, 2025
ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிப்குட்பட்ட பெத்லகேம் பகுதியில் உள்ள வீட்டில் தண்ணீர்தொட்டியில் இன்று (நவ.25) 3 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் உடலை மீட்டு ஆம்பூர் நகர காவல்துறையினர் குழந்தை யாருடையது? எப்படி விழுந்தது என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
News November 25, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தினை இன்று (நவ 25) வெளியிட்டுள்ளது. அதில், “வாகனங்களை ஓட்டும்போது மொபைலில் பேச வேண்டாம்” என்றும் “உங்கள் வாழ்க்கை உங்களை விட்டு போகாமல் இருக்கட்டும் என்றும்” பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் அளவு விபத்துகள் குறையும் தங்கள் உயிரும் பாதுகாக்கப்படும் என வெளியிட்டுள்ளது.
News November 25, 2025
திருப்பத்தூர்: சிறப்பு கல்வி கடன் முகம் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, கல்லூரிப் படிப்பிற்காக கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிப்பதற்காக, மாணவியர்கள் சிறப்பு கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி வரும் 26.11.2025 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் நடைபெறுகிறது. கல்விக்கடன் வாங்க விருப்பம் உள்ள மாணவ மாணவியர் முகாமில் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.


