News March 18, 2024

திருப்பத்தூர்: ஓடும் ரெயிலில் முதியவர் பலி

image

ஆம்பூர் அருகே ஜாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கலீம்முல்லா (வயது 76). இவர் இன்று (மார்ச் 18) அதிகாலை 3 மணியளவில் ஆம்பூரில் இருந்து பெங்களூர் செல்லும் சாம்ராஜ் எக்ஸ்பிரஸில் தனது மகளை பார்க்க பெங்களூர் சென்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே திடீரென ஓடும் ரயிலில் அவர் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை செய்கின்றனர்.

Similar News

News August 22, 2025

திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொதுமக்கள் தங்களது வாகனங்களில் செல்லும் பொழுது அசம்பாவிதங்களை தவிர்க்க, குன்றும் குழியுமாக உள்ள சாலையில் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளனர்.

News August 22, 2025

திருப்பத்தூர்: பத்திரம் தொலைந்தால்…இதை செய்யுங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த இணையதளம் மூலம் பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!