News September 24, 2024

மாஸ் காட்டிய திருப்பதி லட்டு விற்பனை

image

சர்ச்சைக்கு மத்தியிலும் திருப்பதி லட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரம் பேசு பொருளானது. இதனிடையே கடந்த 4 நாள்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்துள்ளதாகவும், இது சராசரியை விட அதிகம் என்றும் கூறியுள்ளது. மேலும், தங்கள் நிர்வாகம் மீது பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News August 11, 2025

மீண்டு எழுந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

image

கடந்த வாரத்தில் கடும் சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 746 புள்ளிகள் உயர்ந்து 80,604 புள்ளிகளிலும், நிஃப்டி 24,585 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. Eternal, Reliance, SBI, Tata Motors உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. நீங்கள் வாங்கிய Share லாபம் தந்ததா?

News August 11, 2025

என் சாவுக்கு 3 பேரு தான் காரணம்.. மாணவி சோக முடிவு

image

ராகிங் கொடுமை ஒரு கல்லூரி மாணவியின் சாவிற்கு காரணமாகியுள்ளது. கேரளாவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு B.A. படிக்கும் மாணவி அஞ்சலி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடிதத்தில், ‘எனது மரணத்திற்கு காரணம் இந்த 3 பேர் தான். என்னை மன ரீதியாக தொல்லை கொடுத்து சோர்வடைய செய்தது வர்ஷா, பிரதீப் மற்றும் பிற நண்பர்களே’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 3 பேரையும் போலீஸ் விசாரித்து வருகிறது. எதற்கும் தற்கொலை தீர்வல்ல!

News August 11, 2025

வைரமுத்துவை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

image

கடந்த 8-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து சீதையை இழந்த ராமர், புத்திசுவாதீனத்தை இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். புத்திசுவாதீனம் இல்லாதவர் செய்யும் தவறு குற்றம் கிடையாது என IPC கூறுவதை சுட்டிக்காட்டி, இதனை அன்றே கணித்த கம்பர், ராமர் குற்றவாளி இல்லை எனக் கூறியதாகப் பேசியிருந்தார். இந்நிலையில் ராமரை வைரமுத்து அவமதித்துவிட்டதாகக் கூறி புதுச்சேரியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!