News April 9, 2025
திருப்பதி-காட்பாடிக்கு ₹1,332 கோடியில் இரட்டை ரயில் பாதை

திருப்பதி-காட்பாடி இடையே ₹1,332 கோடியில் 104 கி.மீ. தூரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் இன்று மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், திருப்பதி- காட்பாடி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் போக்குவரத்தை சீராக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
Similar News
News October 17, 2025
யார் இந்த ரிவாபா ஜடேஜா?

குஜராத் மாநில அமைச்சரவையில் இணைந்துள்ள கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். 2019-ல் BJP-ல் சேர்ந்த இவர், 2022 தேர்தலில் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டு 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். Karni Sena அமைப்பின் மகளிர் பிரிவு தலைவராகவும் உள்ளார். இவரது உறவினர் ஹரி சிங் சோலங்கி ராஜ்கோட்டின் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார்.
News October 17, 2025
BREAKING: அதிரடியாக கைது செய்தது சிபிஐ

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறை வாகன ஓட்டுநர் ரவிச்சந்திரனை CBI அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 6-வது நபராக ரவிச்சந்திரனை கைது செய்த CBI அதிகாரிகள் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர், முன்னதாக கைது செய்யப்பட்ட போலீசாருக்கு எதிராக சாட்சியங்கள் அளித்திருந்தார்.
News October 17, 2025
கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்?

ஆத்து தண்ணி சுவையா இருக்கு, ஆனா இதிலிருந்து கடலுக்கு போற தண்ணி ஏன் உப்பா இருக்குன்னு தெரியுமா? நிலத்தில் விழும் மழைநீர் பாறை, மணலில் உள்ள தாது, உப்புகளை அடித்துச்சென்று ஆறுகளில் கலக்கிறது. இந்த ஆறுகள் உப்பு நிறைந்த நீரை கடலில் கொண்டு சேர்க்கின்றன. கடலில் உள்ள இந்த நீர் கடும் வெயிலால் ஆவியாகிறது. எனவே உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் கடல்நீர் எப்போதும் உப்பாகவே இருக்கிறது. SHARE.