News July 7, 2024
நாகதோஷம் போக்கும் திருநாகேஸ்வரம்

சிவபெருமானை ராகு தவமிருந்து வணங்கி வரம் பெற்ற திருத்தலம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் கோயிலாகும். நாகதோஷம் உள்ளவர்கள் விரதமிருந்து இக்கோயிலுக்கு வந்து, பராசர தீர்த்தத்தில் குளித்து, ராகு காலத்தில் ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ இலை சாற்றி, ‘நாகேச்சர நண்ணுவார்’ என்ற திருஞானசம்பந்தரின் பதிகப் பாடலை பாடி வணங்கினால் கிரக தோஷம் நீங்குவதோடு வளமான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
Similar News
News September 23, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பு ஏற்படுவதை பார்க்கிறோம். தினம் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடுவது இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க உதவும் என்கின்றனர் டாக்டர்கள். இப்பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் நிறைந்திருப்பதால், BP-யை கட்டுப்படுத்த உதவும். இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 23, 2025
என்கிட்டயேவா.. தக் பதில் கொடுத்த மோகன்லால்

மோகன்லாலின் கவுண்ட்டர் பதில்களுக்காகவே அவரது நேர்காணலை பலரும் பார்ப்பதுண்டு. அப்படித்தான் தனக்கு அறிவிக்கப்பட்ட ‘தாதா சாகேப் பால்கே’ விருது குறித்தும் கலகல பதிலை அளித்துள்ளார். ஒரு நடிகருக்கான உயரிய விருதே கிடச்சாச்சு, இதுக்கு மேல சாதிக்க ஒன்னுமில்ல, இனி எதுக்கு நடிப்பை தொடருறீங்க என கேட்கப்பட்டது. அதற்கு, ஐயோ அப்டியா, எனக்கு நடிப்ப தவிர எதுவும் தெரியாது, இனி நான் என்ன செய்வேன் என பதிலளித்தார்.
News September 23, 2025
SETC பஸ்களில் இனி குடிநீர் விற்பனை

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகம் (SETC) மூலம் சென்னையிலிருந்து கோவை, திருப்பூர், நாகர்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணம் செய்யும்போது குடிநீர் பாட்டில் விநியோகம் செய்ய SETC திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்வதற்கான இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.