News August 3, 2024

சுந்தரர் பாடல் பெற்ற திருமுல்லைவாயல் கோயில்

image

சென்னை அம்பத்தூர் அருகே திருமுல்லைவாயலில் உள்ளது மாசிலாமணீஸ்வரர் கோயில். இக்கோயில் இறைவன் மாசிலாமணீஸ்வரர் என்றும், அம்பாள் கொடியிடை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். சுந்தரரால் பாடல் பெற்ற இக்கோயில் இறைவன் மாசிலாமணீஸ்வரரை மனமுருகி வழிபட்டால் குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை ஏற்படும், தடை நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

Similar News

News December 1, 2025

இந்து மதத்தில் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தை!

image

‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ என்றவுடன், இந்து மதத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளது என்றே பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் கோடி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு கோடி(Crore) & வகை என அர்த்தங்கள் வரும். இந்த ‘முப்பத்து முக்கோடி தேவர்கள்’ வாக்கியத்தில் வகை அர்த்தம்தான் சொல்லப்படுகிறது. 33 தேவர்கள் அதாவது, 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், இந்திரன் & பிரஜாபதி ஆகியோர் அடங்குவர்.

News December 1, 2025

அமெரிக்காவில் ‘Reverse migration’ திட்டம்: டிரம்ப் உறுதி

image

வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டை அடுத்து, USA-வின் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வரும் <<18410987>>டிரம்ப்,<<>> ‘Reverse migration’ திட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது, USA-வில் இருக்கக்கூடாத அனைத்து மக்களும் வெளியேற்றப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், USA-க்கு அடைக்கலம் தேடி சென்ற <<18401691>>ஆப்கன்<<>> உள்ளிட்ட <<18409306>>பல்வேறு நாடுகளை<<>> சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

News December 1, 2025

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க; இன்றே கடைசி

image

PM ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.1) முடிவடைகிறது. பேரிடர் & பிற காரணங்களால் உங்கள் பயிர் சேதமானால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை நேரடியாக உங்கள் வங்கிக்கே வரும். இதற்கு நீங்கள் ஏக்கர் ஒன்றுக்கு ₹482-ஐ பிரீமியமாக கட்டினால் போதும். காப்பீடு தொகையாக ஏக்கருக்கு ₹32,160 கிடைக்கும். PMFBY போர்ட்டலில் இன்றே விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!