News March 25, 2025
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க டிப்ஸ்

தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். 12PM – 4PM மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் 4லி தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சத்துள்ள பழங்கள், இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 20, 2025
சென்னை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
ஆரிய சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்: CM ஸ்டாலின்

நீதிக்கட்சி தொடங்கிய நாளையொட்டி X தளத்தில் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கை பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்ட, தாய் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என மெய்ப்பிப்போம் என்று கூறியுள்ள அவர், ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
உடைகிறதா BJP-சிவசேனா கூட்டணி?

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, மகராஷ்டிரா BJP, சிவசேனா தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணி பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.


