News March 18, 2024
சேலம் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சேலம் வர உள்ள நிலையில், விமான நிலையத்தில் வந்துச் செல்லும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். ஹெலிகாப்டரில் வரும் பிரதமர், சேலம் விமான நிலையம் வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Similar News
News December 5, 2025
சேலம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
சேலத்தில் கல்லை போட்டு கொல்ல முயற்சி: 5 பேருக்கு காப்பு!

சேலம்: அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி அருகே கக்கன் காலனியை சேர்ந்த மேள தொழிலாளியான ஜெயகாந்த் (23) என்பவரை கடந்த, 1 இரவு, 6 பேர் கொண்ட கும்பல் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்றனர். இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை காரிப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து மின்னாம்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் (19), கூட்டாத்துப்பட்டி அருள்பிரகாஷ் (19) ஆகியோர நேற்று கைது செய்தனர்.
News December 5, 2025
சேலம் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில், வாக்காளர் கணக்கீட்டு படிவம் 85 சதவீதம் மட்டுமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைத்து,வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.படிவத்தை ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம் பெறாது என்று தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.SHAREit


