News April 4, 2025
இ-சேவை மையங்களில் டிக்கெட் புக்கிங்

கிராமப்புற மக்கள் தொலைதூர பயணங்களுக்கு முன்பதிவு செய்ய வசதியாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இ-சேவை மையங்களில் புக்கிங் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்களை கேன்சல் செய்யவும் இ-சேவை மையங்களை அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆன்லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து மக்கள் பயணித்து வருகின்றனர்.
Similar News
News March 15, 2026
ராணிப்பேட்டையில் சூடுபிடிக்கும் அரசியல் களம்

கலவை பேரூராட்சியில் நேற்று மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயலாளருமான கே.எல். இளவழகன் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முக்கிய வீதிகளில் வீடு வீடாகச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். இந்நிகழ்வில் அப்பகுதி பாமக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
News March 15, 2026
கட்சி சொல்லுமிடத்தில் நிற்பேன்: அண்ணாமலை

வரும் தேர்தலில் இந்த தொகுதியில் நில் என்று கட்சி கூறினால், அங்கு நிற்பேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவரை தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று வாய்திறந்து சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார். கட்சியின் கட்டளைப்படி தெருமுனை பிரசாரத்தை தான் செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, சிங்காநல்லூர் தொகுதியில் <<19379037>>அண்ணாமலை<<>> போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News March 15, 2026
ஒரு மாவட்டமே திமுகவுக்கு கிடையாதா?

தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் புகைச்சல் உண்டாகியுள்ளது. இந்நிலையில், நாகையில் உள்ள 3 தொகுதிகளும் கூட்டணி கட்சிகளின் வசமே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், திமுகவினர் அதிருப்தியில் உள்ளனராம். 2 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒரு தொகுதியை காங்., கட்சியும், மேலும், விசிகவும் ஒரு தொகுதியை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


