News April 25, 2024
இப்படி ஏ.சி. பயன்படுத்தினால் மின்கட்டணத்தை சேமிக்கலாம்

ஏசி பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படியெனில் கீழ்காணும் வழிகளை கடைபிடித்தால், மின்சாரக் கட்டணத்தை சேமிக்கலாம். 1) ஏர் பில்டர்களை 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றவும் 2) ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் (அ) ஏசி கன்ட்ரோலர் பயன்படுத்தவும் 3) அறையின் ஜன்னல், கதவை மூடிவிடவும் 4) சரியான டெம்ப்ரேச்சரை செட் செய்யவும் 5) அறையின் அளவுக்கேற்ற ஏசி வாங்கவும் 6) இரவில் ஸ்லீப்பிங் மோடில் பயன்படுத்தவும்
Similar News
News April 10, 2026
மகளிர் உரிமைத் தொகை.. NEW UPDATE

மாநில அளவிலான அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் பென்சன் உள்ளிட்ட பயனாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் வேறு திட்டத்தில் பயனாளிகளாக இருந்தால், அவர்களுக்கு உரிமைத் தொகை நிறுத்தப்படும். அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதே இதன் நோக்கம்.
News April 10, 2026
மக்கள்தொகை கணக்கெடுப்பு.. 5.7 லட்சம் குடும்பங்கள் பதிவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் ஒருபகுதியாக சுய கணக்கெடுப்பு ஏப்.1 முதல் தொடங்கியது. இதன்மூலம், பொதுமக்கள் தாங்களாகவே ஆவணங்களை பூர்த்தி செய்து டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை, 5.72 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். TN-ல் ஜூலை 17, 2026 முதல் தொடங்க உள்ளது.
News April 10, 2026
BREAKING: விஜய் பரப்புரையில் மயக்கம்.. பதற்றம் உருவானது

காரைக்குடியில் விஜய்யின் பரப்புரையை காணச் சென்ற பெண் உள்பட 3 பேர் வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பதற்றம் நிலவியது. எனினும், மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பகல் 12 மணி முதல் 2.30 வரை பரப்புரைக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், விஜய் பரப்புரை இடத்திற்கு செல்வதற்கே 2.30 மணிக்கு மேலாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


