News September 13, 2024
இன்று இடி-மின்னலுடன் மழை: RMC

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள். SHARE IT
Similar News
News December 25, 2025
யார் இந்த சீமா அகர்வால்?

TN-ன் புதிய டிஜிபி ரேஸில் டாப்பில் இருக்கும் <<18664993>>சீமா அகர்வால்<<>>, ராஜஸ்தானை சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு தமிழ்நாடு IPS பேட்ஜை சேர்ந்த இவர், தொடர்ந்து தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் டிஜிபியாக இருக்கிறார். இவரது கணவர் சென்னை முன்னாள் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். தமிழக டிஜிபியாக இவர் பதவியேற்றால், தமிழகத்தின் 2-வது பெண் டிஜிபி என்ற சிறப்பை பெறுவார்.
News December 25, 2025
பொங்கல் பரிசுடன் பணம்.. கடந்து வந்த பாதை

பொங்கல் பரிசு குறித்த அரசின் அறிவிப்பு தள்ளிப்போவதால் மக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2026 பொங்கல் பரிசுடன் ரொக்கம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தல் சமயம் என்பதால் பம்பர் ஆஃபராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கும் வழக்கம் எப்போது வந்தது எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News December 25, 2025
ஒரே வீட்டில் 44 பேர் எரித்துக் கொலை.. ஓயாத ஓலம்

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.


