News April 27, 2024
தமிழகத்தில் போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!

மக்களவைத் தேர்தலில் மூவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வரலாறு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அதன் விவரம் இதோ:- 1952 – ராமலிங்க செட்டியார் (கோவை) 1957 – கணபதி நாடார் (திருச்செந்தூர்) 1962 – கிருஷ்ணமாச்சாரி (திருச்செந்தூர்). இவர்கள் 3 பேரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் கிருஷ்ணமாச்சாரிக்கு அப்போதைய பிரதமர் நேரு, மத்திய அமைச்சர் பதவி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 24, 2026
பாஜகவை பார்த்து விஜய்க்கு அச்சம்: திருமா

‘ஜன நாயகன்’ தணிக்கை வழக்கில் பாஜகவின் தலையீடு இருந்தால் அதை விஜய் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால், பாஜக மற்றும் மோடி அரசை எதிர்ப்பதற்கு விஜய் தயாராக இல்லை என்றும், அவர் அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிவதாகவும் திருமாவளவன் பேசியுள்ளார். மேலும், எதற்காக அச்சப்படுகிறார் என்ற காரணத்தை மக்களிடம் விஜய் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
News January 24, 2026
நன்மைகள் கொட்டி கிடக்கும் கரிசலாங்கண்ணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤கரிசலாங்கண்ணியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ➤நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் இது வெளியேற்றும் ➤குழந்தைகளுக்கு 2 சொட்டு கரிசலாங்கண்ணிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும் ➤மஞ்சள் காமாலை போன்ற அனைத்து வகை காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்து. SHARE IT.
News January 24, 2026
PM-ஐ கையோடு மதுரைக்கு கூட்டிபோகணும்: உதயநிதி

2017-ல் மதுரையில் எய்ம்ஸ் வரப்போவதாக சொல்லி, 2019-ல் அதற்கான செங்கல்லை வைத்தனர். 8 ஆண்டுகள் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை என உதயநிதி கூறியுள்ளார். தேர்தல் வருவதால் PM மோடி 10 முறையாவது TN வருவார் என்ற அவர், அப்படி வருபவரை மதுரைக்கு கூட்டிச்சென்று எய்ம்ஸுக்கு விடிவுகாலம் வரச்செய்ய வேண்டும் என்றார். மேலும், அது நடந்தால் TN மக்கள் அவருக்கு நன்றி சொல்வர் எனவும் பேசியுள்ளார்.


