News April 27, 2024
தமிழகத்தில் போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!

மக்களவைத் தேர்தலில் மூவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வரலாறு தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. அதன் விவரம் இதோ:- 1952 – ராமலிங்க செட்டியார் (கோவை) 1957 – கணபதி நாடார் (திருச்செந்தூர்) 1962 – கிருஷ்ணமாச்சாரி (திருச்செந்தூர்). இவர்கள் 3 பேரும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் கிருஷ்ணமாச்சாரிக்கு அப்போதைய பிரதமர் நேரு, மத்திய அமைச்சர் பதவி வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 14, 2025
இன்றைய OTT விருந்து!

தியேட்டரில் வாரா வாரம் புது படங்கள் ரிலீசாவதை போலவே, OTT-யிலும் வாரா வாரம் புது படங்கள் வெளிவர தொடங்கி விட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்கள், இந்த வார OTT விருந்தாக இன்று வெளியாகியுள்ளன. அந்த படங்களின் லிஸ்ட்டை தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்க. இதில், எந்த படத்தை பார்க்க நீங்க வெயிட்டிங்?
News November 14, 2025
100 இடங்களை தாண்டியது NDA

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி BJP 56, JDU 44, LJP (RV) 3 என மொத்தம் 103 இடங்களில் NDA முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், 60 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்த INDIA கூட்டணி, தற்போது 55 இடங்களாக குறைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. RJD 38, CONG 12, CPI (ML) 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
News November 14, 2025
குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பேன்: CM ஸ்டாலின்

தாயன்பு காட்டி குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிடமாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் நிற்பேன் எனவும் அவர்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பரந்த பார்வையும் பகுத்தறிவும் கொண்ட குடிமக்களாய் அவர்களை வளர்த்தெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.


