News March 23, 2025
ரஷ்யாவின் ட்ரோன் மழை.. தாக்குதலில் மூவர் பலி

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால் உக்ரைனை முழுமையாக அழித்தே தீருவேன் என ரஷ்யா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று கீவ்வில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். உக்ரைன் அனுப்பிய 147 ட்ரோன்களில் 97 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறது.
Similar News
News March 25, 2025
BREAKING: சேனலை மூடுகிறார் சவுக்கு சங்கர்

தான் நடத்தும் ’சவுக்கு மீடியா’ யூடியூப் சேனலை மூடுவதாக சவுக்கு சங்கர் அறிவித்துள்ளார். இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தாயின் உயிரை பணயம் வைத்து சேனல் நடத்த விருப்பமில்லை என்று கூறியுள்ள அவர், இது இந்த சமூகத்தின் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
News March 25, 2025
டெல்லிக்கு ₹1 லட்சம் கோடிக்கு பட்ஜெட்!

டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில், முதல் முறையாக அம்மாநில பேரவையில் CM ரேகா குப்தா நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் ₹1 லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், டெல்லியில் நீடித்திருந்த ஊழல் மற்றும் திறனற்ற சகாப்தம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார். கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டை விட, இது 31.5% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2025
கொடூர மனைவிகளுக்கு எதிராக ‘புருஷா கமிஷன்’ வருமா?

சமீபகாலமாக, குடும்ப பிரச்னைகளில் ஆண்களும் பாதிக்கப்படும் செய்திகள் வருகின்றன. ஆண்களை பாதுகாக்க யாருமே இல்லையா என்பவர்களுக்கு, ‘புருஷா கமிஷன்’ பற்றி தெரியுமா? கொடூரமான மனைவிகளிடம் இருந்து காக்க, 2018ல் ஆந்திர மகிளா கமிஷனின் தலைவி ராஜகுமாரி இக்கோரிக்கையை வைத்தார். ஆனால், மாதர் சங்கங்கள் இதை எதிர்க்க, கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது அந்த சங்கத்திற்கு உயிர் கொடுக்கலாமே! என்ன சொல்றீங்க?