News April 8, 2025
மிரட்டல் கடிதம்.. அவசரமாக தரையிறங்கிய விமானம்..

255 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து மும்பை சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து வெடி குண்டு மிரட்டல் கடிதம் கிடைத்துள்ளது. பயணிகள் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News April 8, 2025
IPL: புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்…!

‘ஸ்விங் கிங்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் புவனேஷ்வர் குமார், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆர்சிபி அணியில் தற்போது விளையாடிவரும் அவர்(184), பிராவோவின்(183) சாதனையை தகர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாஹல் (206), சாவ்லா (192) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் புவனேஷ்வர் குமார் உள்ளார்.
News April 8, 2025
அடுத்த விழாவுக்கு தயாராகும் அயோத்தி!

அயோத்தி அடுத்த விழாவுக்கு தயாராகி வருகிறது. சரியாக ஓராண்டுக்கு முன் பால ராமரின் பிராண பிரதிஷ்டை அயோத்தியில் கோலாகலமாக நடந்தது. இந்த சிலையை கர்நாடக சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி இருந்த நிலையில், முதல் மாடியில் பிரம்மாண்ட அரச தர்பார் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், அடுத்த மாதம் தர்பார் திறக்கப்படவுள்ளது.
News April 8, 2025
மாநில அரசு சொல்வதை கவர்னர் கேட்க வேண்டும்

அரசியலமைப்பின் பிரிவு 200ன் படி கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக கூறப்படுவது ஏற்புடையதல்ல; பொதுவான விதியின்படி கவர்னர் என்பவர் மாநில அரசின் உதவி & ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மசோதாவுக்கு அனுமதி வழங்கலாம், நிறுத்தி வைக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் ஆகிய 3 முடிவுகளை மட்டுமே கவர்னர் எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.