News September 13, 2024
மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தனர்: கோவை எம்.பி

அன்னபூர்ணா குழும தலைவர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக கோவை MP கணபதி குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பாகவே அவர் பேசியதாகவும், GSTல் உள்ள முரண்களை தெளிவாக எடுத்துரைத்ததாகவும் பாராட்டினார். யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவரது மன்னிப்பு <<14087957>>VIDEO<<>>க்கு பின்னணியில், பெரிய கூட்டமே உள்ளதாகவும் சாடினார்.
Similar News
News January 18, 2026
தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

தேனி மாவட்டம், வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.19) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா தெரிவித்துள்ளார். SHARE IT
News January 18, 2026
இன்று தை அமாவாசை.. இதை மட்டும் பண்ணாதீங்க

☆முன்னோர்களுக்கான இந்நாளில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. அவற்றை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம் ☆வீட்டார் அசைவம் சாப்பிடக்கூடாது ☆தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருள்களை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. இயன்றவற்றை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் ☆வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது ☆இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. SHARE IT.
News January 18, 2026
போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.


