News April 26, 2025
போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

போப் பிரான்சிஸின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏப். 21-ம் தேதி மறைந்த அவரது உடலுக்கு இதுவரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்பட 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸின் உடலுக்கு காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. இதனையடுத்து, அவருக்கு இறுதி விடை கொடுக்க மத குருக்கள் தயாராகி வருகின்றனர். #RIP
Similar News
News November 15, 2025
பள்ளி மாணவி மரணம்.. நெஞ்சை உலுக்கிய கொடுமை

குழந்தைகள் தினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்ததே வேறு. நேற்று(நவ.14) பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக சென்ற 6-ம் வகுப்பு மாணவி காஜலை, 100 முறை தோப்புக் கரணம் போடச் சொல்லி பனிஷ்மெண்ட் கொடுத்துள்ளனர். ஸ்கூல் பேக்குடன் தோப்புக் கரணம் போட்ட அந்த மாணவி, வீடு திரும்பியதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். இத்தகைய பள்ளிகளை என்ன செய்வது?
News November 15, 2025
காங்கிரஸ் கட்சியை ஒழிக்க வந்தவன் நான்: சீமான்

காமராஜர் மறைவுக்குப்பின் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அழிந்துவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். மேலும் ஈழத்தின் கனவை அழித்த காங்கிரஸை ஒழிக்கவே, தான் அரசியல் களத்திற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்., திராவிட கட்சிகளின் தோளில் பயணிப்பதாகவும் தன்னைப் போல தனியாக 234 தொகுதியிலும் அவர்களால் தனித்து போட்டியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 15, 2025
வங்கி கணக்கில் ₹2,000… வந்தது HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 21-வது தவணை தொகை(₹2,000) குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நவ.19-ம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், KYC அப்டேட் செய்யாமல் இருந்ததால், கடந்த தவணை தொகை பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தற்போது, அவர்களுக்கு 2 தவணை தொகை ₹4,000 மொத்தமாக வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


