News September 7, 2025

TN-ல் பல ஆயிரக்கணக்கானோர் ஆதரவு: செங்கோட்டையன்

image

தமிழகம் முழுவதும் குறிப்பாக ஈரோட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான MGR, ஜெயலலிதாவின் தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி என்றார். கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு, அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 8, 2025

கட்சியிலிருந்து நீக்கம்; மல்லை சத்யா ரியாக்‌ஷன்

image

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை; வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News September 8, 2025

கடைசி வரிசையில் PM மோடி.. பாஜக சொல்லும் மெசேஜ்!

image

டெல்லியில், BJP MP-க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் PM மோடி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அக்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். GST மறுசீரமைப்பு விளக்கம், கட்சி வளர்ச்சி குறித்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பிரதமராக இருந்தும் கூட மோடி கடைசி வரிசையில் அமர்ந்து தான் ஒரு சாதாரண தொண்டன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியதாக பாஜகவினர் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News September 8, 2025

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்

image

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!