News September 28, 2025
10,000 பேருக்கு அனுமதி கேட்டு பல ஆயிரம் கூடிய அவலம்

கரூர் விஜய் பரப்புரையில் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வீடியோக்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன. அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் அலறித் துடிப்பது துயரம் மிகுந்த அவலமாக மாறியுள்ளது. விஜய்யின் கடந்த பரப்புரையின் போதே அனுமதி கோரிய அளவை விட அதிக எண்ணிக்கையில் தான் மக்கள் கூடினர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இன்றைய கரூர் பரப்புரைக்கும், 10,000 பேர் கூடுவார்கள் என தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
பொங்கல் பரிசு பணம்.. முக்கிய தகவல் கசிந்தது

பொங்கல் பரிசுத்தொகைக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. பொதுவாக பொங்கல் பரிசு பணம் ரேஷன் கடைகளில் தான் வழங்கப்படும். ஆனால் இம்முறை வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பணத்தை கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் இந்நடைமுறையை மேற்கொள்ளலாமா என பரிசீலித்து வருவதாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.
News January 3, 2026
முக்கியமான Calls-ஐ மிஸ் பண்ணாம இருக்க DO THIS

வீட்டில் உள்ளவர்கள் அவசர தேவைக்கு உங்களுக்கு Call பண்ணும்போது, அதனை எடுக்கமுடியாமல் போனால் ஏதாவது அசம்பாவிதம் நேரலாம். இதனை தவிர்க்க போனில் இந்த Settings-ஐ ON- செய்யுங்க. ➤போனில் உள்ள Dial pad-க்கு சென்று ➤Calling Accounts ➤Call forward Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤நெருங்கிய உறவினரின் போன் நம்பரை உள்ளிடுங்கள். Call-ஐ நீங்கள் எடுக்கவில்லை என்றால், அது அவர்களுக்கு Forward ஆகும். SHARE.
News January 3, 2026
யார் இந்த வேலுநாச்சியார்?

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு ஒரே மகளாக 1730-ல் பிறந்தார். தனது கணவர் மறைவையடுத்து, ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கையை 1780-ல் மீட்டெடுத்தார். இதனால் இந்தியாவின் முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என அழைக்கப்படுகிறார். 2008-ல் மத்திய அரசு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த வீரமங்கையை பெருமைப்படுத்தியது.


