News May 20, 2024
நிர்பயாவுக்கு நீதி கேட்டவர்கள் இன்று குற்றவாளிக்கு ஆதரவு

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் கைது செய்யப்பட்டதற்கு AAP கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஸ்வாதி, அன்று பாதிக்கப்பட்ட நிர்பயாவுக்காக வீதிக்கு வந்த ஆம் ஆத்மியினர், இன்று சிசிடிவியை மறைத்த குற்றவாளியைக் காப்பாற்ற வீதிக்கு வந்துள்ளதாக விமர்சித்தார். மணீஷ் சிசோடியா இருந்திருந்தால் தனக்கு இவ்வளவு மோசமாக நடந்திருக்காது எனத் தெரிவித்தார்.
Similar News
News September 14, 2025
விஜய்யின் பரப்புரை ரத்து

பெரம்பலூரில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது. விஜய் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். ஆனால் மக்கள் கூட்டத்திற்கு இடையே அரியலூரில் இருந்து பெரம்பலூர் செல்வதற்கு விஜய்க்கு நள்ளிரவுக்கு மேல் ஆனது. இதனால் வேறு வழியின்றி பெரம்பலூர் பரப்புரை ரத்தானது. விஜய்யின் பேச்சை கேட்க பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
News September 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 14, ஆவணி 29 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News September 14, 2025
ஒரு மாதத்தில் நல்லது நடக்கும்: செங்கோட்டையன்

அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் இணைய வேண்டும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதே தனது ஆசை என்று செங்கோட்டையன் பேசினார்.