News October 28, 2025

RO-KO-வை விமர்சித்தவர்கள் கரப்பான்பூச்சிகள்: ஏபிடி

image

கடந்த சில மாதங்களாக ரோஹித்தும், கோலியும் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஒருவர் சரியாக விளையாடாத போது, பொந்துகளில் இருந்து வெளிவரும் கரப்பான்பூச்சிகள் போல் விமர்சகர்கள் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டிற்காக தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கொடுத்தவர்கள் மீது ஏன் இந்த வன்மம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News October 28, 2025

இந்திய கிரிக்கெட்டை துரத்தும் சோகம்

image

காயம் காரணமாக, பிரதிகா ராவல் மகளிர் உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, 2023 ODI ஆடவர் உலகக் கோப்பையின் போதும், வின்னிங் வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக வெளியேறினார். 2019 உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக ஷிகர் தவான் விலகிய நிலையில், அரையிறுதியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. வீரர்களின் இந்த விலகல்கள், ரசிகர்களின் மனதை பெரும் காயங்களாக மாறியுள்ளது.

News October 28, 2025

அக்டோபர்28: வரலாற்றில் இன்று

image

*1492 – கொலம்பஸ், கியூபாவை கண்டுபிடித்தார்.
*1627 – முகலாய பேரரசர் ஜஹாங்கீர் நினைவுநாள்.
*1922 – முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகள், இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
*1955 – Microsoft நிறுவனர் பில் கேட்ஸ் பிறந்தநாள்.
*1988 – நடிகை வாணி போஜன் பிறந்தநாள்.

News October 28, 2025

கொளத்தூரில் போலி வாக்காளர்கள்? எல்.முருகன்

image

தமிழகத்தில் SIR அவசியமான ஒன்று என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்திலேயே ஸ்டாலின் இதை எதிர்ப்பதாக விமர்சித்த அவர், முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையால், திமுகவின் முறைகேடுகள் அம்பலமாகும் எனவும் முருகன் தெரிவித்துள்ளார். நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!