News March 16, 2024
தேர்தலில் போட்டியிட, வாக்களிக்க முடியாதவர்கள்

1.தேர்தலில் போட்டியிட முடியாதவர்கள்…
*25 வயதை நிரம்பாதவர்கள்.
*வாக்காளர்கள் பட்டியலில் பெயரில்லாதவர்கள்.
*ஜாமினில் இருப்பவர்கள்.
*நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டவர்கள்.
2.வாக்களிக்க முடியாதவர்கள்…
*இந்திய குடியுரிமை அல்லாதோர்.
*பிறநாட்டு குடியுரிமை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள். *தண்டனைக் குற்றவாளிகள். *பல வாக்காளர் பட்டியல்களில் பெயர் உள்ளவர்கள். *மனநலம் குன்றியவர்கள்.
Similar News
News April 13, 2025
சிக்கன் விலை கிடுகிடு உயர்வு!

சிக்கன் விலை இன்று(ஏப்.13) சற்று உயர்ந்துள்ளது. நாமக்கல் மொத்த சந்தையில் முட்டை ₹4.15க்கும், முட்டைக் கோழி ₹85க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் கறிக்கோழி ₹7 உயர்ந்து ₹96ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் தோல் நீக்கிய கோழிக்கறி கிலோ ₹200 – ₹240 வரையிலும், தோலுடன் கூடிய கோழிக்கறி ₹160 – ₹200 வரையிலும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ எவ்வளவு?
News April 13, 2025
வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மம்தா உறுதி

மே.வங்கத்தில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வக்ஃப் சட்டத்தை அரசு அமல்படுத்தாது என அம்மாநில CM மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தச் சட்டத்தை மத்திய அரசு தான் கொண்டு வந்தது. எனவே, அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News April 13, 2025
சபரிமலையில் பக்தர்களுக்கு Food poison!

சபரிமலையில் தரிசனத்திற்காக சென்ற 10 பக்தர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் சன்னிதான ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பம்பாவின் திரிவேணி மணப்புரத்திலுள்ள காபி லேண்ட் ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பம்பா டூட்டி மாஜிஸ்திரேட் தலைமையிலான குழு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தது.